தோழர் என்பதற்கு தகுதி இல்லாமல் போன
''கோமாளி'' சாமியே
நம்பிக்கை துரோகம்
வசூலுக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்-என
வாய் கூசாமல் பொய் சொன்னீர் ..
வேட்பாளர் ஆக்கியதும் ,
சட்டமன்ற குழு தலைமை பொறுப்பு கொடுத்தும்,
நம்பிக்கையில் தானே நண்பா..
தோழர்கள் இரத்தம் சிந்தி ,
கொடுத்த பதவி, அதை நீ,
முதலாளித்துவத்தின் முதுகில் ஏறவும்,
வாங்கி கொடுக்கும் , வஞ்சக செயலுக்கு
பயன்படுத்திவிட்டாயே ...
நினைவில்லையோ உமக்கு ?
கௌரியும், சோம்-நாத்தும்
தொடரும் பட்டியலில் ...
இவர்களை விடவா ? நீ?
எங்கு இருக்கிறார்கள் ? இருக்கிறார்களா ?
முதலாளி வர்க்கம் உன்னை முதன்மைபடுத்தும்
இன்னும் மூன்று மாதங்களுக்கு மட்டும்.
அதன்பின் ,
''கோவிந்தா'' சாமியே !
சரித்திரம் சொல்லும் உம்மை சதிகாரன் என்று....